BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 3 March 2014

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதுதான் காங்கிரஸ் அரசின் தாரக மந்திரம்: ஜெயலலிதா


இன்று காஞ்சிபுரத்தில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசிய ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பேசினார். அப்பொழுது அவர், இந்தியாவை பாதுகாக்க பாதுகாப்புத்துறையும், முப்படைகளும் வலுவானதாக இருக்க வேண்டும். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நமது ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினை நவீன மயமாக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளை வீணடித்துவிட்ட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு,  மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் செயல்படுகிறது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதுதான் காங்கிரஸ் அரசின் தாரக மந்திரம். 2ஜி ஊழல், ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் என இந்த அரசின் ஊழல் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது என்றும் தனது பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media