BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 3 March 2014

உமா மகேஸ்வரி அடுத்து, மும்பையில் டி.சி.எஸ் பெண் ஊழியர் கொடூரமாக கொலை, அழுகிய நிலையில் நெடுஞ்சாலையில் பிணம் கிடந்தது


சென்னை சிறுசேரியில் உள்ள டிசிஎஸ் பெண் ஊழியர் உமாமகேஸ்வரி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகளே அடங்காத நிலையில், மும்பையிலும் ஒரு டிசிஎஸ் பெண் ஊழியர் எஸ்தர் அனுசுயா அதே போன்று கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

சென்னையில் கொல்லப்பட்ட உமாமகேஸ்வரியின் உடலை போன்றே எஸ்தரின் உடலும் 11 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 28 வயது சந்திரா பான் சனா அல்லது சவுக்கியா என்ற நபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.  23 வயதான எஸ்தரின் தலையை சாலையில் மோதியும், அவர் அணிந்திருந்த துப்பட்டாவை கொண்டு அவரது கழுத்தை நெறித்து கொன்றதுடன், அவர் வைத்திருந்த கைப்பையையும் பறித்து சென்றுள்ளான், சவுக்கியா.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media