நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் இன்று தொடங்குகிறார். மாலை 4 மணிக்கு நடக்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலுக்கு ஆதரவு கேட்டுப் பேசுகிறார். கூட்டம் முடிந்ததும், சென்னைக்கு ஹெலிகாப்டரில் திரும்புகிறார்.
காஞ்சி புரத்தில் பிரச்சார மேடை அமைக்க முதலில் காந்தி ரோடில் உள்ள தேரடியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பிரச்சார மேடை வடக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும் என்று கட்சித் தலைமை விரும்பியது. இதனால் பிரச்சார மேடை, காமராஜர் சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார். தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள அனைத்து பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் செல்வார். ஒவ்வொரு முறையும் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் சென்னை திரும்பிவிடுவார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்கட்ட பிரச்சாரத்தை ஜெயலலிதா சங்கரன்கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி நிறைவுசெய்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.