BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 3 March 2014

ராஜபக்சே மன்மோகன் சந்திப்பு - ஏன் இப்படி என கருணாநிதி வேதனை


 மூன்று பேரின் விடுதலை குறித்த வழக்கில், குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகளை, அனைத்து மாநில அரசுகளும் அறிந்து வைத்திருக்க வேண்டும்’என்றெல்லாம் கூறியிருக்கிறார். மாநில அரசுதான், இந்தப் பிரச்சினையை சட்டப்படி முறையாக அணுகவில்லை என்று தெரிகிறது.

இலங்கையில் நடந்தது போர்க் குற்றங்கள்தான், அதுகுறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் கேட்கிறான். இந்த நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபரைச் சந்தித்துப் பேசுகிறார் என்பது தமிழர்களையும் தமிழகத்தையும் புறக்கணிக்கும் செயலாகும். மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் ஏன்தான் இப்படியெல்லாம் செய்கிறார்களோ என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media