BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 3 March 2014

மும்பை டிசிஎஸ் பெண் ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் பின்னணி


மும்பையை சேர்ந்த அனுசுயா எஸ்தரின் உடல் அவர் கொலை செய்யப்பட்ட 11 நாட்களுக்கு பிறகு, அழுகிய நிலையில், அவரது பிணம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக, சந்திரா பான் சனா அல்லது சவுக்கியா என்ற 28 வயது நபர் ஒருவனை அம்மாநில போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இவன் மீது திருட்டு மற்றும் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து நாசிக்கிற்கு எஸ்தர் வந்தடைந்த பின், ர‌யில் நிலையத்தை விட்டு அவர் வெளியேறும்போது அவருக்கு அருகே சவுக்கியா நடந்து சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ம‌து அருந்திவிட்டு யாரிடமாவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபடலாம் என எண்ணிக்கொண்டிருந்தபோது அதிகாலை நான்கு மணியளவில் நாசிக் ரயில் நிலையத்தில் தனியாக உட்கார்ந்திருந்த எஸ்தரிடம், அந்தேரியுள்ள உள்ள அவரது வீட்டில் கொண்டுபோய் விட 300 ரூபாய் கேட்டதுடன், தனது செல்போன் எண்ணையும் அவரிடம் தெரிவித்ததாக போலீசார் நடத்திய விசாரணையின்போது கொலையாளி தெரிவித்தான். ஆனால், தன்னிடம் பைக் மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த எஸ்தர், அதில் ஏற மறுத்ததால், ஆத்திரம் அடைந்து அப்பெண்ணை சாலையின் மறுமுனைக்கு இழுத்துச்சென்று அவரை அடித்து கொன்றதாக அவன் ஒப்புக்கொண்டான்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media