குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு 2002ல், அம்மாநிலத்தில் நடந்த மதக்கலவரத்தை காரணம் காட்டி அமெரிக்கா, விசா தருவதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது அவர் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க அரசு சார்பில் பேசிய அமெரிக்க மாகாண துணைச் செயலர் நிஷா டெஸி பிஸ்வால் “உண்மையான ஜனநாயக நாடான இந்தியாவிலிருந்து வரும் எந்தவொரு தலைவரையும் அமெரிக்க அரசு வரவேற்கும். எனவே மோடி இந்தியாவின் உயரிய பதவியான பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரை அமெரிக்கா கண்டிப்பாக வரவேற்கும். அவரது விசா குறித்த கெடுபிடிகள் தளர்த்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை இக்கருத்திற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில்:
“விசா குறித்த வரைமுறைகள் வழக்கமான முறையிலே நடைபெறும். நரேந்திர மோடி அவர்கள் விசா கேட்டு விண்ணப்பித்தால் அது குறித்து தக்கமுறையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மோடிக்கு விசா வழங்குவது பற்றி எங்களது அரசு யூக அடிப்படையில் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.