செய்தித்தாள் ஒன்றிற்கு அலைபேசியில் பேட்டி கொடுத்திருந்தார் மு.க.அழகிரி. அப்பொழுது தனக்கென சில கோரிக்கைகள் இருக்கிறதாகவும், அதை நிறைவேற்றினால் ஒழிய, திமுகவில் தான் மறுபடியும் இணைய வாய்ப்பில்லை என்று கூறினார். கம்யூனிஸ்ட்கள் திமுக அணிக்கு வந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு, அழகிரி கூறிய பதிலாவது:
"எம்.ஜி.ஆர். நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படம் பார்த்திருக்கீங்களா? அதில் ‘அண்டாகா கசம் அபூகாகுகும் கதவை திறந்திடு சீசே’ என்று சொல்லுவார்கள். அதேமாதிரி ‘அண்டாகா கசம் அபூகா குகும் மூடிடு சீசே’ என்றும் ஒரு வசனம் வரும். திமுக-வில் இப்பொழுது அது மாதிரிதான் நடந்துக்கொண்டு இருக்கு. அதாவது கலைஞர் கூட்டணி கதவு திறந்து இருக்கிறது என்கிறார். இன்னொருவர் மூடி இருக்கிறது என்கிறார்.
தேமுதிக, திமுக கூட்டணியில் சேராதது அவர்கள் தலையெழுத்து என்றும் பதில் அளித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.