BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 9 March 2014

இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்து விட்டது, மோடி இந்தியர் நலன் காக்க வந்துள்ளவர்- ராம் ஜெத்மலானி


முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக வாதாடிய, ராம்ஜெத்மலானிக்கு ம.தி.மு.க வழக்கறிஞர் பேரவை சார்பில், நேற்று சென்னையில் பாராட்டு விழா நடந்தது. அப்பொழுது விழாவில் கலந்து கொண்டு தனது ஏற்புரையில் ராம் ஜெத்மலானி பேசியபோது, "இலங்கைத் தமிழர்களுக்கு ராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் மூலம் இந்திய அரசு துரோகம் செய்து விட்டது. இலங்கையில் போராடுவதற்கு, விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி கொடுத்ததே இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு தான். ஆனால் தற்போது அவர்களின் வாழ்வை மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது." என்று அவர் கூறினார்.

மேலும், வரவிருக்கும் நாடாளுமன்ற‌ தேர்தலில் நரேந்திர மோடி அதிக ஆதரவு பெறுவார். அவர் இந்திய நலன் காக்க வந்துள்ளவர். ஆனால், காங்கிரஸ் பல தவறுகளை செய்து, ஆம் ஆத்மி கட்சி போன்ற குட்டிக்கட்சிகளின் போர்வையில் மறைக்கப் பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்ய ஜெயலலிதா எடுத்த முடிவு பாராட்டுக்குரியது என்றும் மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி கருத்து தெரிவித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media