BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 9 March 2014

பாஜக கூட்டணியை விட்டு வெளியேறும் பாமக

பாஜக கூட்டணியை விட்டு வெளியேறும் பாமக, இன்னும் சிறிது நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.


கடந்த சில நாட்களாக பாஜகவும் பாமகவும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்கள், தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகள் பாஜக கூட்டணியில் இருப்பது உறுதியான நிலையில் பாமக வேட்பாளர்களை அறிவித்த தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளையே தேமுதிக, பாஜக, மதிமுக கட்சிகள் கேட்கின்றன, மேலும் பாமகவினர் அவர்களுடன் சமுதாய கூட்டணியில் இருக்கும் பிடி.அரசகுமாருக்கும், கோவை நாகராஜ்க்கும் சீட் கேட்டனர், ஆனால் இதை பாஜகவினர் பேச்சுவார்த்தையில் மறுத்துவிட்டார்கள்.

பாஜக பாமக கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்த நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாமக தரப்பில் இருந்து இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தற்போது தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸூடன் நிர்வாகிகள் ஆலோசனையில் உள்ளார்கள்.

பாஜக கூட்டணியிலிருந்து  பாமக வெளியேறினால் பாஜக கூட்டணிக்கு தமிழகத்தில் பாதிப்பு இருக்கும் என்று கருதுகிறீர்களா? உங்கள் கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்கள். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media