ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தலைவர் நவி பிள்ளையின் யோசனையான இலங்கை அரசுக்கு எதிராக சர்வ தேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இது குறித்து பேசிய ராஜபக்சே, அந்த தீர்மானம் குறித்து எங்களுக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. என்னையும், எனது அரசையும் குறிவைத்து சில சக்திவாய்ந்த நாடுகள் செயல்படுகின்றன என்று கூறியிருக்கிறார்.
மேலும் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், "ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் ஆணையர் நவநீதம் பிள்ளை சமீபத்தில் இலங்கை வந்திருந்தார். 4 நாள்கள் தங்கியிருந்த அவர் தவறான தகவல்களை திரட்டிச் சென்றார். இப்போது அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது. அதை நாங்கள் நிராகரிக்கிறோம்." என்றும் தெரிவித்தார்.
பிரிவினையை கோரிய விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து, இலங்கையில் வசிக்கும் அனைவரும் வாழ்வதற்கான உரிமையை தான் உறுதிப் படுத்தியுள்ளதாகவும், மனித உரிமை தொடர்பான நடவடிக்கை அனைத்தையும் எடுத்துவருவதாகவும், காணாமல் போனவர்களை பற்றி விசாரிக்க குழு அமைத்துள்ளதாகவும் ராஜபக்சே தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.