BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 9 March 2014

நாட்டை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கும் சாதுர்யம், சாமர்த்தியம், துணிவு அம்மாவிடமே இருக்கிறது- மதிரை ஆதீனம்


வெள்ளிகிழமை அன்று முதல்வர் ஜெயலலிதாவை ச‌ந்தித்து இருந்தார், மதுரை ஆதீனம்.   ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டி அவர் பேசியதாவது:

நாட்டை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கும் சாதுர்யம், சாமர்த்தியம், துணிவு இவை அனைத்தும் அம்மாவிடம் இருக்கிறது. இந்தத் தேர்தலில் பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் தான் பெருமளவில் வெற்றிபெறப் போகின்றன. அப்படியொரு சூழல் வரும்போது அம்மா பிரதமராக வருவதை யாராலும் தடுக்க முடியாது; அது காலத்தின் கட்டாயம். தென் இந்தியர்களை பிரதமராக வரவிட மாட்டார்கள் என்பதெல்லாம் மாயை. அம்மாவை வடக்கும் வரவேற்கும். அதன் தொடக்கம்தான் மம்தா பானர்ஜியும் அம்மாவும் தொலைபேசியில் உரையாடி இருப்பது. அம்மா பிரதமரானால் முல்லைப் பெரியாறு, காவிரி, ஈழம், கச்சத்தீவு இத்தனை பிரச்சினைகளுக்கும் விடிவு பிறக்கும்

இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார். மேலும், ஜெயலலிதாவிற்காக சமயப்பணிகளுக்கு நடுவே, நாற்பது தொகுதிகளிலும் சுமார் ஒரு மாத காலம் பிரச்சாரம் செய்யலாம் என்ற தீர்மானத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media