BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 29 April 2014

16 வயது கர்ப்பிணி பெண்ணை அவளது தாயே வெட்டி கொலை


மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள முட்கல் கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம் பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்று, அவளது நகைகளை திருடிச் சென்று விட்டதாக அந்த பெண்ணின் தாயார் சில தினங்களுக்கு முன்னர் போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறவே, சந்தேகப்பட்ட போலீசார்,  புகார் அளித்த அந்த பெண்ணின் தாயாரிடமே விசாரணை நடத்திய போது, அவர் அதிர்ச்சிகரமான உண்மையை ஒப்புக் கொண்டார். அதாவது , அவர் தனது மகள் 4 மாத கர்ப்பமாக இருந்ததாகவும், கருவுக்கு காரணமானவன் யார்? என்ற உண்மையை மறைத்து, கருவையும் கலைக்க மறுத்த அவளை உறங்கும் போது கோடாரியால் வெட்டிக் கொன்று விட்டு, கொள்ளையர்கள் மீது பழியை போட முயன்றதாகவும் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து, அந்த பெண்னை கைது செய்த போலீசார்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media