BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 29 April 2014

கோச்சடையான் சிறப்புக் காட்சியை நரேந்திர மோடி பார்க்க ஏற்பாடு

சென்னையில் ரஜினியை சந்தித்து தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த குஜராத் மாநில முதல் மந்திரியும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மசாலா படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்றும், குறிப்பாக ரஜினியின் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தை பார்த்த பிறகு அவரது ரசிகர்களில் ஒருவராக மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘கோச்சடையான்’ படத்தை பார்க்க மோடி சமீபத்தில் விருப்பம் தெரிவித்ததாகவும், அவருக்கான சிறப்புக் காட்சிக்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  மே 8-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள சிறப்புக் காட்சியில் இப்படத்தை நரேந்திரமோடிக்கு திரையிட்டு காட்ட முடிவெடுத்துள்ளனர். இந்த சிறப்புக் காட்சியில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் படத்தைக் கண்டு ரசிக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை ‘கோச்சடையான்’ படத்தை வெளியிடும் மும்பை ஈரோஸ் இண்டர்நேஷனல் பிக்சர்ஸ் புரெடக்‌ஷன் நிறுவனம் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர, குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் மோடிக்காக இப்படத்தை திரையிட்டுக் காட்டப் போவதாகவும், இந்த சிறப்புக் காட்சியில் ரஜினி பங்கேற்க மாட்டார். படத்தின் இயக்குனர் சவுந்தர்யா அஷ்வின் இதில் பங்கேற்பார் என்று மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media