தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் மார்ச் 5-ந்தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அன்றிலிருந்து இதுவரை, பொது சுவர்களில் சுவரொட்டி ஒட்டுவது போன்ற விதிகளை மீறியதாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் வந்தன. அவற்றின் அடிப்படையில் 2,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் தமிழகமெங்கும் வாகன விதிகளை மீறியதாக 262 வழக்குகள், ஒலிபெருக்கி விதிகளை மீறியதாக 20 வழக்குகள், சட்டவிரோதமாக கூட்டம் நடத்தியதாகவும், பேசியதாகவும் 81 வழக்குகள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுத்ததாக 90 வழக்குகளும், மேலும் சில விதிமீறல்கள் தொடர்பாக 436 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆக மொத்தத்தில் பல்வேறு தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 3,793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.