BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 29 April 2014

தொலைகாட்சி நேரலை போது, தீயிட்டுக்கொண்டு கட்சி தலைவரையும் கட்டிப்பிடித்த தொண்டர்


லக்னோவில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் 'ஜன்மத் 2014’ என்ற நேரலை விவாத நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்கபதற்காக பல்வேறு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரத்தில், விவாதம் தொடர்பாக உணர்ச்சிவசப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இளம் தொண்டர் ஒருவர், தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீயிட்டு பின் அங்கிருந்த பகுஜன் சமாஜ் தலைவர் கம்ரூசம்மா பவுஜீயை கட்டிப்பிடித்தார்.

தொண்டரின் இந்த செயலால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தீயிட்டுக் கொண்ட தொண்டர், துர்கேஷ் என்று அடையாளம் காணப்பட்டார். இந்த சம்பவத்தில், துர்கேஷ் மற்றும் பகுஜன் தலைவர் பவுஜ் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media