தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா (வயது 48), சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில் கூறியிருப்பதாவது:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தேன். கடந்த 14-ந்தேதி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் பிரசாரம் செய்தேன். அப்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான நிவாரண தொகை வழங்கப்படவில்லை. இந்த நிவாரண தொகைகள் அனைத்தும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் உறவினர்களுக்கும், ஆளும் கட்சியினருக்கும், விவசாய நிலமே இல்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என்று பேசினேன். எனக்கு கிடைத்த தகவல்களை கொண்டு இவ்வாறு பேசினேன். ஆனால், நான் பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் விதமாக பேசியதாக ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர் செய்யது என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் என் மீது கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அமைச்சரின் நிர்பந்தத்தால், என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் விதமாகத்தான் நான் பேசினேன். அமைதியை சீர்குலைக்கும் விதமாக எதுவும் பேசவில்லை. எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், பிரேமலதா விஜயகாந்திற்கு முன் ஜாமீன் வழங்கினார். மேலும், வழக்கு விசாரணைக்கு தேவைப்படும்போது மட்டும், கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.