BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 16 April 2014

சென்னையில் ஜெயலலிதா 3 நாட்கள் வீதிவீதியாக வேனில் சென்று தீவிர பிரச்சாரம்

முதல்வர் ஜெயலலிதா வரும் 19-ம் தேதி (சனிக்கிழமை) முதல் சென்னையில் 3 மக்களவைத் தொகுதிகளிலும் ஆலந்தூர் சட்ட மன்றத் தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார். 19-ம் தேதி மாலை போயஸ் கார்டனில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கும் ஜெயலலிதா, ஆலந்தூர் சட்ட சபைத் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து தில்லை கங்கா நகர், ஆலந்தூர் நீதிமன்றம், ஆகிய இடங்களில் பேசுகிறார். பின்னர் மத்திய சென்னை தொகுதியில் எம்எம்டிஏ காலனி மெயின் ரோடு வழியாக சென்று ரசாக் கார்டன் சந்திப்பிலும் அயனாவரம் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சூளை வழியாக வந்து சூளை தபால் நிலையம் அருகிலும் பின்னர், வால்டாக்ஸ் சாலை சந்திப்பு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய இடங்களிலும் உரையாற்றுகிறார்.

ஏப்ரல் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். திருவொற்றியூர் தேரடி, மணலி நெடுஞ்சாலை சந்திப்பு, சத்தியமூர்த்தி நகர், பெரவள்ளூர் சந்திப்பு ஆகிய இடங்களில் உரையாற்றுகிறார்.

அதைத் தொடர்ந்து 21-ம் தேதி தென் சென்னை தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடி, சைதாப்பேட்டை ஐந்து விளக்கு, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், தி.நகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பேசுகிறார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media