ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின் போது நீதிமன்றம் கூறியதாவது: "ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள என்.சீனிவாசன் விசாரணை முடியும் வரை பிசிசிஐ தலைவராக தொடர முடியாது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள என்.சீனிவாசன் உள்பட 13 பேர் மீதான விசாரணையை பிசிசிஐ மேற்கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகளை கண்டும் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. ஐபிஎல் சீசன்-7 போட்டிகளுக்கு தலைமை செயல்பாட்டு அதிகாரியாக தொடர சுந்தர் ராமனுக்கு அனுமதி வழங்கப்படுகிறது". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக சுந்தர்ராமன் தொடர பீகார் கிரிக்கெட் வாரியம் தடை கோரி மனு தாக்கல் செய்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், பிசிசிஐ இடைக்கால தலைவர் காவஸ்கார், சுந்தர்ராமன் ஐபிஎல் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக தொடர ஆட்சேபனை தெரிவிக்காததால் சுந்தர் ராமனுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.