BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 26 April 2014

பாஜகவில் இணைந்ததற்கான காரணங்களை கூறுகிறார் மன்மோகனின் சகோதரர்

"மோடி அலை வீசவில்லை" என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வரும் நிலையில், அவரது சகோதரர் தல்ஜீத்சிங் கோலி (மன்மோகன் சிங் தந்தையின் 2–வது மனைவியின் மகன்) பா.ஜனதாவில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதாவில் அவர் இணைந்ததை வரவேற்ற மோடி இதன் மூலம் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்று கூறினார்.

பாரதீய ஜனதாவில் சேர்ந்தது குறித்து தல்ஜீத்சிங் கோலி கூறியதாவது:

பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சி நடத்திய விதம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் சுயமாக செயல்படவிடவில்லை. மத்திய அரசை நடத்த அவருக்கு முழு அதிகாரம் வழங்கவில்லை. அவருக்கு உரிய திறமைபடி வேலை செய்ய அனுமதிக்கவில்லை. இதனால்தான் பா.ஜனதாவில் இணைவது என்று முடிவு எடுத்தேன். பா.ஜனதா டிக்கெட் வழங்கினால் தேர்தலில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தல்ஜீத்சிங் கோலி பா.ஜனதாவில் இணைந்ததால் காங்கிரஸ் கட்சியும், குடும்பத்தினரும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இது குறித்து மன்மோகன் சிங் பேசிய போது, "என் சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது. என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பெரியவர்கள் இவ்வாறு செய்கிறார்களே" என்று கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media