BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 12 April 2014

இலங்கையில் இருந்து கொண்டுவரப்படும் ஏழு அனகோன்டா பாம்புகள் விரைவில் விலங்கியல் பூங்காவில் வைக்கப்படும்

திருவனந்தபுரம் விலங்கியல் பூங்காவில் விரைவில் அனகோண்டா பாம்புகள், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இதற்காக இலங்கையில் இருந்து 7 அனகோண்டா பாம்புகள் (6 பெண் பாம்பு, ஒரு ஆண் பாம்பு) கொண்டு வரப்பட்டுள்ளன. அவை இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தயாரான பிறகு வுரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று விலங்கியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம், பாம்பு இனங்களில் மிகவும் நீளமான, அதிக எடைகொண்ட பாம்பு அனகோண்டா பாம்புகள் கொண்ட 4-வது விலங்கியல் பூங்கா என்ற பெருமையை திருவனந்தபுரம் பூங்கா பெறுகிறது. இதுவரை மைசூர், ஐதராபாத் விலங்கிய பூங்காக்கள் மற்றும் சென்னையில் உள்ள முதலைப் பண்ணையில் இத்தகைய பாம்பு உள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media