மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. மணி சங்கர் அய்யர், "மோடி அரசுக்கு அனைவரும் அஞ்சுகின்றனர். மதச்சார்பற்ற ஒவ்வொரு இந்தியனுக்கும் பாஜக அல்லாத அரசு அமைய வேண்டும் என்பதே விருப்பம். தமிழகத்தில் அமைந்திருப்பது பாஜக தலைமையிலான கூட்டணி இல்லை, தேமுதிக தலைமையிலான கூட்டணியாகும். " என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. அப்படியே ஏதாவது வெற்றி பெற்றாலும் அது கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் பெறும் வெற்றியாகவே இருக்கும். இந்த வெற்றி கூட பொன்.ராதாகிருஷ்ணனின் தந்தை காமராஜரின் வலது கரமாக செயல்பட்டவர் என்பதற்காக விழும் வாக்குகளாகவே இருக்கும். எனவே, அது காங்கிரசுக்கு கிடைக்கும் மறைமுக வெற்றியாகும். " என்று கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் இருந்து மூன்று முறை எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள மணிசங்கர் அய்யர், கடந்த 2009 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார்.
மயிலாடுதுறையில் இருந்து மூன்று முறை எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள மணிசங்கர் அய்யர், கடந்த 2009 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.