BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 12 April 2014

"சிலர் மோடியை நீக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதுவே எனது எண்ணமும் கூட" என வாஜ்பாய் கூறியதாக தெரிவித்திருக்கிறது காங்கிரஸ்

பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயை புகழ்ந்து மற்றும் பாஜக பிரதம வேட்பாளார் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தும், காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ இணையதள வலைப்பதிவில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாஜகவை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒரு மிக சிறந்த நபர். அவரை போன்ற ஒரு தலைவர் தற்போது பாஜகவில் இல்லை. 2002-ல் நடைபெற்ற குஜராத் கலவரத்திற்கு பிறகு கட்சி மிக பெரிய பின்னைடைவை சந்திக்கும் என்றும், மோடியின் செயல்பாடுகளை நினைத்தும் வாஜ்பாய் கவலைப்பட்டார்.

கட்சியின் மூத்த தலைவரை நிராகரித்து, குற்றப் பின்னணியில் உள்ள ஒரு முதல்வரை பாரதிய ஜனதா கட்சி எப்படி பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது? குஜராத் கலவரத்திற்கு பின், வாஜ்பாய், "சிலர் மோடியை நீக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதுவே எனது எண்ணமும் கூட' என்றார். கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி எந்த உதவிகளை செய்யவில்லை. மோடியை வெளியேற்ற வேண்டும் என நினைத்த வாஜ்பாயையே தற்போது பாஜக மறந்து விட்டது. அவர் பின்பற்றிய கட்சி மரபுகளையும் கட்சி மறந்து விட்டது' என்று அந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸின் இந்தக் கட்டுரைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, இது ஆளும் கட்சியின் விரக்தியையே காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media