BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 12 April 2014

ஜெ . எந்த நாட்டிற்கு பிரதமர் ஆவார் ?? -வைகோ கேள்வி .

தென்காசி (தனி ) தொகுதியில் மதிமுக வேட்பாளர் சதன் திருமலை குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் .

அப்போது அவர் சிலர் ஜெ. பிரதமர் ஆவார் என்று கூறுகின்றனர் . அவர் எந்த நாட்டிற்கு பிரதமர் ஆவார் . கொள்ளையடித்த பணத்தில் வாங்கி வைத்துள்ள தீவிற்கு பிரதமர் ஆவாரா அல்லது போயஸ் தோட்டத்தில் செட் வைத்து பிரதமர் நாற்காலி என எழுதி வைத்து ஆவாரா ? பொது சிவில் சட்டத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை . கூட்டணி தான் என்றாலும் முக்கிய பிரச்சினைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று கூறினார் .

பிரச்சாரத்திற்கு முன் பாஜக தேசிய செயலர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ வீட்டிற்கு வந்தார் . ஏற்கனவே தேமுதிக தலைவர்  வைகோ வீட்டிற்கு வருகை தந்துள்ளதையடுத்து , அடுத்து பாமக தலைவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media