BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 12 April 2014

கடந்த 4 தேர்தல்களில், திருமணம் ஆனதை மறைத்த மோடி மீது வழக்கு பதிவு செய்ய கோரி காங்கிரஸ் மனு தாக்கல்

பாஜக பிரதம வேட்பாளார் நரேந்திர மோடி, வதோதரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட கடந்த 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தபோது தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் மனைவி பெயர் யசோதா பென் என்றும் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து நாடு முழுவதும் பல சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

தனக்கு திருமணம் நடந்த தகவலை தெரிவிக்காமல் மறைத்து,  கடந்த நான்கு தேர்தல்களில் தவறான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார் மோடி என்றுஅவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணையத்திடம் கபில் சிபல் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று மனு கொடுத்தனர்.

மனு கொடுத்துவிட்டு திரும்பியதும் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் நிருபர்களிடம் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

2002க்கும் 2012-க்கும் இடைப்பட்ட காலத்தில் குஜராத் சட்டப் பேரவைக்கான தேர்தல்களில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் தனக்கு திருமணமான தகவலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்காமல் மோடி மறைத்துள்ளார். இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம் இந்த மனு தொடர்பாக ஆய்வு செய்வதாக தேர்தல் ஆணையம் உறுதி கொடுத்துள்ளது என க‌பில் சிபல் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media