தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தாமரைச் செல்வனை ஆதரித்து நேற்று இரவு நடந்த பிரச்சார பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பாராளுமன்ற தேர்தல்களில் தி.மு.க.வின் கை எப்போது ஓங்குகிறதோ அப்போதெல்லாம் தமிழக மக்களுக்கு நன்மை விளையும், நீதி நிலைக்கும். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் தி.மு.க.வை தலையெடுக்க விடாமல் ஒடுக்க வேண்டும் என்ற முயற்சி நடக்கிறது. கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா ஒரு மாதத்திற்கு 1 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுவதாக அறிவித்தார். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பின் அவருடைய வீட்டில் நடந்த சோதனையில் ரூ.66 கோடி பணம் சிக்கியது. பல்வேறு இடங்களில் அவருக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது 40 தொகுதிகளில் வென்றால் ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராகலாம் என்று அ.தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். இத்தகைய முயற்சிகளையெல்லாம் வென்று தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும். தி.மு.க. தலைவர் கருணாநிதி கைகாட்டும் நபரே இந்தியாவின் பிரதமராவார்.
மதச்சார்பற்ற மத்திய அரசு அமைய தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தர்மபுரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டபோது மக்களுக்கு புதியவர். தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றாக அறிமுகமானவர்.
தர்மபுரி தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வர அவர் கடந்த ஆண்டுகளில் பாடுபட்டுள்ளார். இந்த தொகுதியின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் அதிக அளவில் குரல் கொடுத்துள்ளார். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
பாராளுமன்ற தேர்தல்களில் தி.மு.க.வின் கை எப்போது ஓங்குகிறதோ அப்போதெல்லாம் தமிழக மக்களுக்கு நன்மை விளையும், நீதி நிலைக்கும். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் தி.மு.க.வை தலையெடுக்க விடாமல் ஒடுக்க வேண்டும் என்ற முயற்சி நடக்கிறது. கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா ஒரு மாதத்திற்கு 1 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுவதாக அறிவித்தார். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பின் அவருடைய வீட்டில் நடந்த சோதனையில் ரூ.66 கோடி பணம் சிக்கியது. பல்வேறு இடங்களில் அவருக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது 40 தொகுதிகளில் வென்றால் ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராகலாம் என்று அ.தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். இத்தகைய முயற்சிகளையெல்லாம் வென்று தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும். தி.மு.க. தலைவர் கருணாநிதி கைகாட்டும் நபரே இந்தியாவின் பிரதமராவார்.
மதச்சார்பற்ற மத்திய அரசு அமைய தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தர்மபுரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டபோது மக்களுக்கு புதியவர். தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றாக அறிமுகமானவர்.
தர்மபுரி தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வர அவர் கடந்த ஆண்டுகளில் பாடுபட்டுள்ளார். இந்த தொகுதியின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் அதிக அளவில் குரல் கொடுத்துள்ளார். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.