காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில் இணைக்கப்பட்டுள்ள சொத்து விபரம் குறித்த தகவலில், சோனியா காந்திக்கு ரூ.9.28 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.2.81 கோடி அசையும் சொத்துக்களாகவும், ரூ.6.47 கோடி அசையா சொத்துக்களாகவும் உள்ளன. இது கடந்த தேர்தலில் அவர் குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்பை விட 6 மடங்கு அதிகமாகும். அசையும் சொத்துக்களில் ரூ.85 ஆயிரம் ரொக்கமாகவும், ரூ.66 லட்சம் வங்கியிலும், ரூ.10 லட்சம் பாண்டு பத்திரங்களாகவும், ரூ.1.90 லட்சம் பங்குகளாகவும் உள்ளன. இதுதவிர, ரூ.82.20 லட்சம் மியூச்சுவல் பண்டுகளிலும், வருங்கால வைப்பு நிதியில் ரூ.42.49 லட்சமும், ரூ.2.86 லட்சம் தேசிய சேமிப்பு திட்டத்திலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ரூ.62 லட்சம் ஆபரண நகைகளாகவும் உள்ளன. அசையா சொத்துக்களில், தேராமண்டி கிராமத்தில் ரூ.4.86 கோடி மதிப்புள்ள நிலம், சுல்தான்பூர் கிராமத்தில் ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் தவிர இத்தாலியில் ரூ.19.90 லட்சம் மதிப்பிலான பரம்பரை சொத்தும் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடைய 2012-13ம் ஆண்டு வருமான வரி கணக்கில், ரூ.14.21 லட்சம் வருமானம் வந்துள்ளதாகவும் அதில் ரூ.9 லட்சம் மகன் ராகுல் காந்திக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அவரது பெயரில் எந்த சொந்த வாகனமும் இல்லை.
கடந்த முறை சொத்துக்களின் மதிப்பு புத்தக மதிப்பின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டதாகவும், ஆனால் இந்த முறை நடப்பு சந்தை விலையின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதால் சோனியாவின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், அவரது பெயரில் எந்த சொந்த வாகனமும் இல்லை.
கடந்த முறை சொத்துக்களின் மதிப்பு புத்தக மதிப்பின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டதாகவும், ஆனால் இந்த முறை நடப்பு சந்தை விலையின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதால் சோனியாவின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.