BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 2 April 2014

திமுக நிறைய‌ இடங்களில் வெற்றி பெறுவது ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா கதைதான்’-அழகிரி

நாமக்கல்லில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் அழகிரி. கூட்டத்தில் தனிக்கட்சி தொடங்குவது குறித்து கட்சியினர் தங்களது கருத்துக்களை கூறினர். அதில் கட்சியினர் பலரும் தனிக்கட்சி தொடங்க வேண்டாம் என கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம், நாமக்கல் திமுக ஒன்றிய செயலாளர் பி.கணேசன் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்து கட்சியை சேர்ந்தோர் ஆதரவு கேட்டு வருகின்றனர். யாருக்கு ஆதரவு என்பது குறித்து எனது ஆதரவாளர்களுடன் மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறேன். இன்னும் நான்கைந்து மாவட்டங் களில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளேன். தனிக்கட்சி தொடங்க மாட்டேன். அந்த எண்ணம் எனக்கு இல்லை. கட்சித் தலைமை என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு கருணாநிதியை சூழ்ந்துள்ள பலரது சூழ்ச்சியால் ஏற்பட்ட முடிவாகும்.

முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வனும், நானும் இணைந்து செயல்படவில்லை. பிரிந்துதான் செயல்பட்டோம். திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவது ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா கதைதான்’ அதை அப்புறம் பார்ப்போம். எந்த கட்சி வெற்றி பெறும் என்ற ஜோசியம் எனக்குத் தெரியாது.

இவ்வாறு அழகிரி கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media