நாகப்பட்டினம் கல்லாறு பகுதியைச் சேர்ந்தவர் மீனவர்கள் செல்வராஜ் மற்றும் அவரது மகன் கரண். இருவரும் நேற்று டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்பும் போது டீசல் தீர்ந்து போனது. இதனால் இருவரும் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் மீனவர்கள் 2 பேரையும் மீட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்சென்றனர். நாளை அவர்களின் படகுக்கு உரிய டீசலை வழங்கி திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகவலை ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர் அருள்ராஜ் தெரிவித்தார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.