மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் சட்டமன்ற கட்சித் துணைத் தலைவருமான பாலபாரதி, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிடும் 18 தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். இதற்கிடையே ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா பிரதமராகும் சூழல் அமைந்தால் அவரை ஆதரிப்பீர்களா என்று கேட்கப்பட்ட போது, "தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்று சொல்வதற்கு எங்களுக்கு ஒன்றும் புத்தி பேதலித்துவிடவில்லை." என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா காங்கிரஸை விமர்சிக்கிறார். ஆனால், பாஜக-வை பற்றி எதுவுமே பேசுவதில்லை. சட்டமன்றத்தில் விஜயகாந்தை உட்காரவிடாமல் தொல்லை கொடுத்தார்கள். இப்போது அவர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக-வை கண்டபடி விமர்சிக்கிறார். ஆனால், அதிமுக தரப்பில் அவரைப் பற்றி எதுவுமே பேசுவதில்லை. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? ‘மத்தியில் நல்லரசு அமைப்போம்’ என்று ஜெயலலிதா சொல்கிறார். ஆனால், ‘16 கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இடது முன்னணியில் சேர்ந்து ஆட்சி அமைப்போம்’ என்று சொல்லவில்லை. ஜெயலலிதா யாருடைய ஆட்சியில் அங்கம் வகித்து மாநில உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்று சொல்வதற்கு எங்களுக்கு ஒன்றும் புத்தி பேதலித்துவிடவில்லை. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் பாஜக ஆதரிக்கும் எந்த அரசுக்கும் நாங்கள் ஆதரவு தரமாட்டோம்.
இவ்வாறு பாலபாரதி கூறியிருந்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா காங்கிரஸை விமர்சிக்கிறார். ஆனால், பாஜக-வை பற்றி எதுவுமே பேசுவதில்லை. சட்டமன்றத்தில் விஜயகாந்தை உட்காரவிடாமல் தொல்லை கொடுத்தார்கள். இப்போது அவர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக-வை கண்டபடி விமர்சிக்கிறார். ஆனால், அதிமுக தரப்பில் அவரைப் பற்றி எதுவுமே பேசுவதில்லை. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? ‘மத்தியில் நல்லரசு அமைப்போம்’ என்று ஜெயலலிதா சொல்கிறார். ஆனால், ‘16 கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இடது முன்னணியில் சேர்ந்து ஆட்சி அமைப்போம்’ என்று சொல்லவில்லை. ஜெயலலிதா யாருடைய ஆட்சியில் அங்கம் வகித்து மாநில உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்று சொல்வதற்கு எங்களுக்கு ஒன்றும் புத்தி பேதலித்துவிடவில்லை. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் பாஜக ஆதரிக்கும் எந்த அரசுக்கும் நாங்கள் ஆதரவு தரமாட்டோம்.
இவ்வாறு பாலபாரதி கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.