திமுகவிற்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் குஷ்பூ, ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், திமுகவுக்கு அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவது நிச்சயம் சரியாக இருக்கும் என்றும், அவரது உழைப்பை யாரும் குறை சொல்ல முடியாது என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், "தளபதியின் உழைப்பை யாராலும் குறைசொல்ல முடியாது. அவரது கடின உழைப்பு, கட்சி யிலுள்ள அனைத்து தொண்டர் களுக்கும் தெரியும். அவர் தலைமைப் பதவிக்கு நிச்சயம் பொருத்தமானவர்தான். இது எழுதப்படாத உண்மை." என்று தெரிவித்திருந்தார்.
ஸ்டாலின் தலைமை பொறுப்பிற்கு சரியானவர் என்று கூறிய குஷ்பூ, அழகிரி பற்றி தான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறினார்.
ஜெயலலிதா பிரதமர் ஆவது குறித்து கேட்கப்பட்ட போது, "ஒரு பெண், நாட்டின் பிரதமராக வந்தால் அது நாட்டுக்கும், பெண்களுக்கும் பெருமைதான். ஆனால், அந்தப் பெண் நாட்டுக்கு நல்லது செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.
கடந்த மூன்றாண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா, மக்கள் நலத் திட்டங்கள் எதையும் செய்யவில்லை. தேர்தல் நெருங் கும் நிலையில், சில இலவசத் திட்டங்களை காட்டினார்கள். கடந்த தேர்தலில் அவர் அளித்த எந்த வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றவில்லை" என்று குஷ்பூ பதிலளித்தார்.
ஸ்டாலின் தலைமை பொறுப்பிற்கு சரியானவர் என்று கூறிய குஷ்பூ, அழகிரி பற்றி தான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறினார்.
ஜெயலலிதா பிரதமர் ஆவது குறித்து கேட்கப்பட்ட போது, "ஒரு பெண், நாட்டின் பிரதமராக வந்தால் அது நாட்டுக்கும், பெண்களுக்கும் பெருமைதான். ஆனால், அந்தப் பெண் நாட்டுக்கு நல்லது செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.
கடந்த மூன்றாண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா, மக்கள் நலத் திட்டங்கள் எதையும் செய்யவில்லை. தேர்தல் நெருங் கும் நிலையில், சில இலவசத் திட்டங்களை காட்டினார்கள். கடந்த தேர்தலில் அவர் அளித்த எந்த வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றவில்லை" என்று குஷ்பூ பதிலளித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.