BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 11 April 2014

ஒரு நாள், கருணாநிதியை திமுகவை விட்டு வெளியேற்ற போகிறார், சகுனி வேலை பார்க்கும் ஸ்டாலின்-ஜே.கே.ரித்தீஷ்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.கே. ரித்தீஷ்., நேற்று முதல்வர் ஜெய லலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கினார்.

இதையடுத்து, ஜே.கே.ரித்தீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நான் அதிமுகவில் இணைந்துள்ளேன். தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.

திமுகவை அண்ணா முதன் முதலில் உருவாக்கும் போது, திமுகவை யாராலும் அழிக்க முடியாது. திமுககாரனால்தான் திமுகவை அழிக்க முடியும் என்றார். தற்போது, அந்த வேலையை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.

என்றைக்காவது ஒரு நாள் கருணாநிதியை மு.க. ஸ்டாலின் வெளியேற்றுவார். தி.மு.கவை அழிக்கும் சகுனியாக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். திமுகவில் அவருடைய ஆதரவா ளருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவரு டைய ஆதரவாளர்கள்தான் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர். மு.க.அழகிரியின் முடிவு வலிமையாக இல்லை. உட்கட்சி தேர்தல் நேரத்தில் மு.க.அழகிரி வலிமையான முடிவு கள் எடுத்திருந்தால் சிறப்பாக இருக்கும். இப்போது கூட, அவரிடம் சொல்லி விட்டு தான் நான் அதிமுகவில் இணைந்துள்ளேன். நாடாளு மன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக் காது. என்னை போல் மேலும் சில நிர்வாகிகளும் அதிமுகவில் விரைவில் இணையவுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது மின்தடை என்று கூறும் திமுக வுக்கு 2 முறை மத்திய அரசில் அங்கம் வகிக்கும் போது இது தெரியவில்லையா? இதற்காக என்ன நடவடிக்கையை திமுக எடுத்தது? தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வாங்கக்கூட நடவடிக்கை எடுக்கவில்லையே.

இவ்வாறு நிருபர்களிடம் ஜே.கே.ரித்தீஷ் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media