ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்திருந்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் நேற்று சந்தித்தார். அப்போது கண்ணீர் மல்க இருவரும் பேசிக் கொண்டனர். ஜெயிலில் பேரறிவாளனை சந்தித்து விட்டு வெளியே வந்த அற்புதம்மாள் கூறியதாவது:
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த தகவலை என் மகனிடம் தெரிவிக்க வந்தேன். பேரறிவாளன் விடுதலையை எதிர்பார்த்திருந்தான். அவன் மனதை தளர விடவில்லை. விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறான்.
அவன் விடுதலையாகும் வரை போராடுவேன். மீண்டும் போராடி வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த தகவலை என் மகனிடம் தெரிவிக்க வந்தேன். பேரறிவாளன் விடுதலையை எதிர்பார்த்திருந்தான். அவன் மனதை தளர விடவில்லை. விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறான்.
அவன் விடுதலையாகும் வரை போராடுவேன். மீண்டும் போராடி வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.