BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 26 April 2014

காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரியை சந்தித்து காலை தொட்டு ஆசி பெற்ற ராஜ்நாத் சிங்


உத்தர பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் இன்று காலை மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அங்கு அவரது காலைத் தொட்டு ராஜ்நாத் சிங் வணங்கி ஆசி வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற திவாரி வாழ்த்து தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் மூன்று முறை திவாரி முதல் மந்திரியாக பதவி வகித்திருக்கிறார்.

திவாரியை சந்தித்து விட்டு, பின்னர் நிருபர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், “உத்தர பிரதேச சட்டசபையில் இருந்தபோது நான் உரையாற்றியதைக் கவனித்த திவாரி, உடனே என்னை அழைத்தார். இந்த மாநிலத்தின் எதிர்காலம் நீதான் என்று அப்போது வாழ்த்தினார்” என்று கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media