சென்னையில் உள்ள நோக்கியா தொழிற்சாலை 50 கோடி டாலர் முதலீட்டில் 2006ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் 8,000 பேர் நேரடியாகவும், 12,000 பேர் மறைமுகமாகவும் பணிபுரிகிறார்கள். நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் 720 கோடி டாலர் கொடுத்து சில மாதங்களுக்கு முன்பு வாங்கியது. இப்போது வரி பிரச்சினை காரணமாக சென்னை தொழிற்சாலை இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு ரூ.2,400 கோடி வரி பாக்கி தொடர்பாக நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இன்னொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான பிணையை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
வரிப்பிரச்சனை இருந்தாலும் ஒப்பந்தத்தின்படி நோக்கியா நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு மொபைல் போன்களை தயாரித்து தரவேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.