BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 26 April 2014

காங்கிரசு மூன்றாவது அணியுடன் கை கோர்க்குமா ?

தேர்தலுக்கு பின் காங்கிரசு மூன்றாவது அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் அதை சமாஜ்வாதி கட்சி தலைவர் ராம் கோபால் வர்மா மற்றும் இடதுசாரிகள் தலைவர் ராஜாவும் இந்த முடிவை வரவேற்று பேட்டி அளித்தனர் .

ராம் கோபால் வர்மா அளித்த பேட்டியில் மூன்றாவது அணி தான் பாதிக்கு மேற்பட்ட இடங்களை பிடிக்கும் . நாங்கள் இதுவரை பாஜக வை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளோம் . இனிமேலும் செய்வோம் என்றார் .

டி.ராஜா கூறுகையில் நாங்கள்  காங்கிரசு , பாஜக ஆகிய கட்சிகளுக்கு மாற்று கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றே தேர்தல் பிரச்சாரம் செய்தோம் , ஆனால் தேர்தலுக்கு பின் வரும் நிலையை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும் என்றார் .

ஆனால் காங்கிரசு கட்சிக்குள் சிலர் இந்த முடிவை எதிர்க்கின்றனர் . தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மூன்றாம் அணியுடன் சேருவதை விட எதிர் கட்சியாக இருப்பது சிறந்தது என சிலர் காங்கிரசு தலைவர்கள் எண்ணுகின்றனர் .





Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media