பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் டி.ஆர். பச்சமுத்துவை ஆதரித்து வைகோ நேற்று பெரம்பலூரில் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர், "முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினை, இலங்கையுடனான மீனவர் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளில் தமிழகம் நீதி பெற நாம், 39 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் மற்றும் இதுவரை தமிழகம் கொடூரமாக வஞ்சிக்கப்பட்ட நிலை மாற வேண்டும்." என்று கூறினார். மேலும் அவர் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் தாக்கி பேசியதாவது:
தனக்கு திருமணமான தகவலை மறைத்திருக்கிறார் மோடி என்று ஆவேசமாய் கருணாநிதி சுட்டிக் காட்டுகிறார். 1 விரல் அடுத்தவரை சுட்டும்போது 3 விரல்கள் தன்னை சுட்டும் என்பதை அறியாதவரா அவர். மோடியின் திருமணம் ஒரு பால்ய விவாகம். திருமணம் ஆனதும் மோடி சன்னியாசியாக இமயமலை சென்றார். அந்த பெண்மணி ஆசிரியை கனவில் படிக்கச் சென்றார். அவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபடவே இல்லை. ஆனால், கருணாநிதி அப்படியா? இதற்கு மேலும் கருணாநிதி பேசினால் என்னிடம் இருந்தும் சவுக்குகள் வெளியாகும்.
ஜெயலலிதா பிரதமர் கனவில் திளைக்கிறார். எந்த நாட்டுக்கு என்று தெரியவில்லை. ஏதேனும் தீவினை விலைக்கு வாங்கி அதற்கு பிரதமர் ஆகப்போகிறாரா. பேச்சுவார்த்தை என்ற பெயரில் கம்யூனிஸ்ட்களை தினந்தோறும் இழுத்தடித்து, கடைசியில் மரியாதை இல்லாது வெளியேற்றி இருக்கிறார். இந்த அனுபவம் எங்களுக்கும் உண்டு என்ற வேதனையில் இதை சொல்கிறேன்.
இவ்வாறு வைகோ பேசியிருந்தார்.
தனக்கு திருமணமான தகவலை மறைத்திருக்கிறார் மோடி என்று ஆவேசமாய் கருணாநிதி சுட்டிக் காட்டுகிறார். 1 விரல் அடுத்தவரை சுட்டும்போது 3 விரல்கள் தன்னை சுட்டும் என்பதை அறியாதவரா அவர். மோடியின் திருமணம் ஒரு பால்ய விவாகம். திருமணம் ஆனதும் மோடி சன்னியாசியாக இமயமலை சென்றார். அந்த பெண்மணி ஆசிரியை கனவில் படிக்கச் சென்றார். அவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபடவே இல்லை. ஆனால், கருணாநிதி அப்படியா? இதற்கு மேலும் கருணாநிதி பேசினால் என்னிடம் இருந்தும் சவுக்குகள் வெளியாகும்.
ஜெயலலிதா பிரதமர் கனவில் திளைக்கிறார். எந்த நாட்டுக்கு என்று தெரியவில்லை. ஏதேனும் தீவினை விலைக்கு வாங்கி அதற்கு பிரதமர் ஆகப்போகிறாரா. பேச்சுவார்த்தை என்ற பெயரில் கம்யூனிஸ்ட்களை தினந்தோறும் இழுத்தடித்து, கடைசியில் மரியாதை இல்லாது வெளியேற்றி இருக்கிறார். இந்த அனுபவம் எங்களுக்கும் உண்டு என்ற வேதனையில் இதை சொல்கிறேன்.
இவ்வாறு வைகோ பேசியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.