கடந்த தேர்தல்களின் வேட்புமனுவில் நரேந்திர மோடி தனது மனைவியின் பெயரை குறிப்பிடாதது குறித்து காங்கிரஸ் கட்சியினர் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், மன்மோகன் சிங் டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த போது பிரமாண பத்திரத்தில் தனது மனைவியின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறி அவரது பிரமாண பத்திரத்தின் நகலை காண்பித்தார். பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை கிளப்பும் வழக்கம் நம் நாட்டில் கிடையாது என்றும், அப்படி இருக்கும் போது இதுபோன்ற பிரச்சினைகளை நாம் ஏன் கிளப்பவேண்டும்? என்றும் கூறினார்.
2013-ம் ஆண்டு டெல்லி மேல்-சபைக்கு மன்மோகன் சிங் மீண்டும் போட்டியிட்ட போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் நகலை தான் ரவிசங்கர் பிரசாத் காட்டினார் என்று குஜராத் மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் தெரிவித்தனர்.
2013-ம் ஆண்டு டெல்லி மேல்-சபைக்கு மன்மோகன் சிங் மீண்டும் போட்டியிட்ட போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் நகலை தான் ரவிசங்கர் பிரசாத் காட்டினார் என்று குஜராத் மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.