BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 13 April 2014

மோடி பிரதமராக வர வேண்டுமென விரதம் இருந்து புனித யாத்திரை சென்றிருக்கிறார் அவரது மனைவி ய‌சோதா பென்

பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், தனது கணவர் பிரதமராக வேண்டும் என பல மாதங்களாக விரதம் இருந்து, புனித யாத்திரை கிளம்பியிருக்கிறார்

 தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவராகக் கருதப்படும் யசோதா, கடந்த நான்கு மாதங் களாக தன் கணவர் பிரதமராக வேண்டி செருப்பு அணிவதை விட்டு விட்டாராம். இவர், குஜரத்தின் தலைநகரில் இருந்து சுமார் 80 கி.மீ தொலையில் உள்ள உன்ஜா கிராமத்தில், தனது இரு சகோதரர்களுடன் வாழ்ந்து வாழ்கிறார். இது, மோடியின் சொந்த கிராமமான வத்நகரில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ளது. 1968-ல் மோடி மணமுடித்த போது யசோதா ஏழாம் வகுப்பு பயின்று கொண்டிருந்ததாகவும், தம் படிப்பை தொடருவதற்காக, மணமான சில நாட்களில் அவரது தந்தையிடம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படு கிறது. ஆனால், படிப்பிற்காகச் சென்றவரை மோடி திரும்ப அழைக்கவில்லை.

"பல வருடங் களாக அவர் செய்த பூஜைகளுக்கு பலன் அளிக்கும் வகையில், மோடியே யாசோதாவை தன் மனைவி என வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. சுமார் 45 வருடங்களுக்கு முன் மோடி, ஆர்.எஸ்.எஸ் தொண்டுக்காக தம் குடும்பத்தை விட்டு சென்ற பின்,  வேறுயாரையும் திருமணம் செய்ய யசோதா விரும்பியதில்லை என யசோதா பென்னின் சகோதரர் கமலேஷ் மோடி கூறியுள்ளார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media