கடந்த தேர்தல்களில் எல்லாம் மனைவி பெயரை குறிப்பிடாமல் இருந்த மோடி, இம்முறை குறிப்பிட்டதற்கு காரணம், “ரீசர்ஜன்ஸ் இந்தியா” என்ற அமைப்பு தாக்கல் செய்த மனு. அந்த அமைப்பு தாக்கல் செய்த மனுவில், “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முக்கிய விவரங்களை தெரிவிக்காமல் காலியிடமாக விட்டு விடுகின்றனர். அத்தகைய மனுக்களை நிராகரிக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.
மனுதாரரின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், “வேட்புமனு முழுமையாக நிரப்பப்படாமல் இருந்தால், அதை நிராகரிக்க சட்டத்தில் இடமுண்டு. ஆனால், தெரிவிக்கப்படாத விவரங்கள் குறித்து விசாரிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. புகார்கள் வந்தால் விசாரித்து குற்றவியல் நடவடிக்கைக்கு உத்தர விடலாம்” என்று குறிப்பிட்டது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, வேட்பாளர்கள் தங்கள் விவரங்களை தெரிவிக்காமல் இருந்தால், இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, “வேட்பாளர் குறித்த விவரங்களை அறிந்து கொள்வது வாக்காளரின் அடிப்படை உரிமை. எனவே, வேட்புமனுவில் முக்கிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் காலியாக இருந்தால், அது செல்லாததற்கு சமம். அதை தேர்தல் அதிகாரி நிராகரிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்படுத்திய நிர்பந்தம் காரணமாகவே, மோடி எந்த சர்ச்சைக்கும் இடம் கொடுக்க கூடாது என தனக்கு திருமணமான விவரத்தையும், மனைவியின் பெயரையும் நிரப்பியே வேட்பு மனு தாக்கல் செய்தார் எனக் கூறப்படுகிறது.
மனுதாரரின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், “வேட்புமனு முழுமையாக நிரப்பப்படாமல் இருந்தால், அதை நிராகரிக்க சட்டத்தில் இடமுண்டு. ஆனால், தெரிவிக்கப்படாத விவரங்கள் குறித்து விசாரிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. புகார்கள் வந்தால் விசாரித்து குற்றவியல் நடவடிக்கைக்கு உத்தர விடலாம்” என்று குறிப்பிட்டது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, வேட்பாளர்கள் தங்கள் விவரங்களை தெரிவிக்காமல் இருந்தால், இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, “வேட்பாளர் குறித்த விவரங்களை அறிந்து கொள்வது வாக்காளரின் அடிப்படை உரிமை. எனவே, வேட்புமனுவில் முக்கிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் காலியாக இருந்தால், அது செல்லாததற்கு சமம். அதை தேர்தல் அதிகாரி நிராகரிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்படுத்திய நிர்பந்தம் காரணமாகவே, மோடி எந்த சர்ச்சைக்கும் இடம் கொடுக்க கூடாது என தனக்கு திருமணமான விவரத்தையும், மனைவியின் பெயரையும் நிரப்பியே வேட்பு மனு தாக்கல் செய்தார் எனக் கூறப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.