BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 13 April 2014

ஜெயாவின் பிரதமர் கனவு பலிக்காது; திமுக, அதிமுக ஒரு தொகுதி கூட ஜெயிக்காது-அன்புமணி ராமதாஸ்

மயிலாடுதுறை தொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பா.ம.க. மாநில இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நரேந்திர மோடியை பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் இந்தியாவில் முதன்மை மாநிலமாக குஜராத்தை மாற்றினார். அங்கு மின் வெட்டு கிடையாது. தண்ணீர் பிரச்சினை கிடையாது. விலை வாசி உயர்வு இல்லை. பொருளாதார வீழ்ச்சி இல்லை. நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியா மிக சிறந்த நாடாக மாறும். வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரம் வளர்ச்சி அடையும். நதிகள் இணைக்கப்பட்டு தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

இலங்கை தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ ஏற்பாடு செய்யப்படும். தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க முடியும். அ.தி.மு.க.–தி.மு.க.வுக்கு மாற்று அரசு வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இந்த ஏக்கத்தை போக்க 7 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். இதுவே தேசிய ஜனநாயக கூட்டணி.

அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு சட்சிகளுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. ஆனால் பாரதிய ஜனதாவில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மட்டுமே. ஜெயலலிதா பிரதமர் கனவு காண்கிறார். இந்த கனவு பலிக்காது. பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பெற்றி பெறாது.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media