காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா தோற்கடிக்கப்பட வேண்டுமென அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஜெயலலிதாவையோ கருணாநிதியையோ காந்திய மக்கள் கட்சி ஒருநாளும் ஆதரிக்காது. ஆனால், நீலகிரி தொகுதியைப் பொறுத்தவரை ஆ.ராசாவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஆரோக்கியமான அரசியலை விரும்பும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதனால், அதிமுக வேட்பாளரைத் தவிர வேறு எந்த வேட்பாளருக்கும் தே.ஜ.கூட்டணி ஆதரவு அளிக்க முற்பட்டால் அது, ராசாவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுவதாக அமையக்கூடும்.
நீலகிரி வாக்காளர்கள் அனை வரும் ஆ.ராசாவுக்கு எதிராக வாக்களிப்பதை ஒரு சமூகக் கடமையாகக் கருத வேண் டும். வலிமையற்ற மாற்றுக் கட்சி களுக்கும் ஆயிரம் வாக்குகளைப் பெறுவதற்குக் கூட வாய்ப்பு இல்லாத சுயேச்சைகளுக்கும் வாக்களிப்பதனால் ராசாவின் வெற்றியைத் தடுக்க இயலாது. இது ராசாவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே தவிர, ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
இவ்வாறு தமிழருவி மணியன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதாவையோ கருணாநிதியையோ காந்திய மக்கள் கட்சி ஒருநாளும் ஆதரிக்காது. ஆனால், நீலகிரி தொகுதியைப் பொறுத்தவரை ஆ.ராசாவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஆரோக்கியமான அரசியலை விரும்பும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதனால், அதிமுக வேட்பாளரைத் தவிர வேறு எந்த வேட்பாளருக்கும் தே.ஜ.கூட்டணி ஆதரவு அளிக்க முற்பட்டால் அது, ராசாவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுவதாக அமையக்கூடும்.
நீலகிரி வாக்காளர்கள் அனை வரும் ஆ.ராசாவுக்கு எதிராக வாக்களிப்பதை ஒரு சமூகக் கடமையாகக் கருத வேண் டும். வலிமையற்ற மாற்றுக் கட்சி களுக்கும் ஆயிரம் வாக்குகளைப் பெறுவதற்குக் கூட வாய்ப்பு இல்லாத சுயேச்சைகளுக்கும் வாக்களிப்பதனால் ராசாவின் வெற்றியைத் தடுக்க இயலாது. இது ராசாவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே தவிர, ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
இவ்வாறு தமிழருவி மணியன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.