BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 15 April 2014

சுப்ரமணியன் சுவாமி இல்லத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர் என்றும், அவருக்கும், அவர் கணவருக்கும் நற்பெயரே கிடையாது என்று சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்து இருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் கட்சியினர், இன்று டெல்லியில் உள்ள சுப்ரமணியன் சுவாமியின் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கடும் கோஷமிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த ஆவேச தொண்டர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக சுப்பிரமணியன் சுவாமி வீடு முன்பு பரபரப்பு ஏற்பட்டது.  மேலும், அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media