BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 15 April 2014

சச்சினுக்கு கால்பந்து அவ்வளவு நன்றாக வராது, நான் தான் சொல்லி கொடுக்க வேண்டும் - கங்குலி !!

ஒரு நாள் போட்டிகளில் சிறந்த துவக்க வீரர்களான சச்சினும் கங்குலியும் இந்தியா அணிக்கு பல வருடங்கள் விளையாடினர் . இப்போது  ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இருவரும் இரு அணிகளை வாங்கி உள்ளனர் .

இதைப்பற்றி கங்குலி கூறுகையில் சச்சினுக்கு கால்பந்து அவ்வளவு நன்றாக வராது , நான் தான் சொல்லி கொடுக்க வேண்டும் . எங்கள் கொல்கத்தா அணியை சந்திக்க நிறைய பயிற்சி பெற வேண்டும் . சச்சின் என்னுடன் 15 வருடம் விளையாடியும் பெங்காலி சரியாக கற்றுக்கொள்ளவில்லை . அதுபோல கால்பந்தை கற்றுக்கொள்ள இவர் 15 வருடங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறினார் .

கங்குலி தன் கல்லூரி நாட்களில் கால்பந்து வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media