அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், "காவிரி விவகாரத்தில் நேரடி விவாதத்திற்கு அழைத்த கருணாநிதியின் கோரிக்கையை ஏற்கிறேன். சட்டமன்றத்திற்கு வந்து கருணாநிதி இவ்விவகாரம் குறித்து என்னுடன் நேரடியாக விவாதம் செய்யவேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். " என்று கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, காவிரி நீர் விவகாரத்தில் கருணாநிதி தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகத்தை இழைத்து வருகிறார். கருணாநிதி என்னுடன் சட்டமன்றத்தில் விவாதம் செய்யவேண்டும், அல்லது மக்கள் முன் அவர் தனது துரோகத்தை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவேண்டும்.
பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அடுத்த நடைபெறவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அவரை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். அவரது துரோகங்களை நான் பட்டியலிட தயாராக இருக்கிறேன். என்னுடன் கருணாநிதி மட்டுமே மோதவேண்டும். அதை விட்டு துரைமுருகனோ அல்லது வேறு யாரையும் விவாதத்திற்கு அனுப்பக்கூடாது. இதை ஏற்றுக்கொள்ள தயார் என்றால் கருணாநிதி சட்டமன்றத்திற்கு வந்து பேசலாம்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, காவிரி நீர் விவகாரத்தில் கருணாநிதி தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகத்தை இழைத்து வருகிறார். கருணாநிதி என்னுடன் சட்டமன்றத்தில் விவாதம் செய்யவேண்டும், அல்லது மக்கள் முன் அவர் தனது துரோகத்தை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவேண்டும்.
பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அடுத்த நடைபெறவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அவரை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். அவரது துரோகங்களை நான் பட்டியலிட தயாராக இருக்கிறேன். என்னுடன் கருணாநிதி மட்டுமே மோதவேண்டும். அதை விட்டு துரைமுருகனோ அல்லது வேறு யாரையும் விவாதத்திற்கு அனுப்பக்கூடாது. இதை ஏற்றுக்கொள்ள தயார் என்றால் கருணாநிதி சட்டமன்றத்திற்கு வந்து பேசலாம்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.