BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 15 April 2014

பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து எந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீக்கப்பட்டேன்? - உச்சநீதிமன்றத்தில் சீனிவாசன் கேள்வி

2013 ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டி தொடரின்போது சூதாட்டம் மற்றும் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த என்.சீனிவாசனை தலைவர் பதவியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "நான் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து எந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீக்கப்பட்டேன்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். கடந்த 27-03-2014ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உரிய காரணங்கள் இன்றி் தன் மீது குற்றம் சுமத்தியிருப்பது தனக்கு மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும் சீனிவாசன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து தன்னை தற்காலிகமாக நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் வாய்வழி உத்தரவிட்டது ஏன்? என்று தனிப்பட்ட முறையில் தமக்கு தெரியவில்லை என்றும் என்.சீனிவாசன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media