மத்திய பிரதேச மாநிலத்தில், 23 வயது கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த போது அவர் வகுப்பில் படிக்கும் அங்கித், விஷால் மற்றும் அக் ஷய் என்ற மூன்று வாலிபர்கள், வீடு புகுந்து அவரை தீயிலிட்டனர். அவரது உடல் தீயில் 96% சேதம் அடைந்ததால், அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மூவரின் கற்பழிப்பு முயற்சிக்கு அவர் இணங்க மறுத்ததால், அவரை எரித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.
பிரேத பரிசோதனையில், அந்த பெண்ணின் பிறப்புறுப்பு காயம் அடைந்திருந்ததாகவும், அதை வைத்து பார்க்கும் போது, அவர் எரிக்கப்படுவதற்கு முன்பு கற்பழிக்க பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றது.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட அங்கித், விஷால் மற்றும் அக் ஷய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.