மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக இருந்த வாரணாசி தொகுதியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்காக விட்டுக்கொடுத்ததில் வருத்தம் எதுவும் இல்லை என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் மற்றும் அந்த தொகுதியின், தற்போதைய, எம்.பி. முரளி மனோகர் ஜோஷி கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, "பாஜக தலைமையிலான கூட்டணிக்கு நாட்டில் பெரும் அலை வீசுகிறது. வெற்றியை தாண்டிய அதிக பெரும்பான்மை கிடைக்க போவது உறுதியாகி விட்டது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், வாரணாசி தொகுதியில் நான் போட்டியிடுவதாக இருந்த வாரணாசி தொகுதியை பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்காக விட்டுக்கொடுத்து கான்ப்பூரில் போட்டியிடுவதில் வருத்தம் எதுவும் இல்லை” என்றார்.
ஆனால், இதற்கு முன்னதாக, மக்களவைத் தேர்தலில் மோடி வாரணாசியில் போட்டியிடுவதாக முடிவான செய்திகளை அடுத்து, முரளி மனோகர் ஜோஷி அதிருப்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.