திருமண பதிவுச் சான்றிதழை ‘தட்கல்’ முறையில் 24 மணி நேரத்துக்குள் பெறும் வசதியை டெல்லி அரசு அறிமுகம் செய்துள்ளது.
டெல்லி மாநில அரசின் வருவாய்த்துறை செயலர் தரம் பால் இது தொடர்பாகக் கூறுகையில், “உச்ச நீதிமன்றம் 2006-ல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், திருமணமான 60 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்வது டெல்லியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணச்சான்று அவசரமாகத் தேவைப்படுவோருக்கு தட்கல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் திருமண பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு ரூ. 10 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது” என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.