BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 7 May 2014

டிவிட்டரிலும் தொடர்கிறது ரஜினியின் சாதனை! 24 மணி நேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேலானோர் பின் தொடர்ந்தனர்

நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் இணையத்தளத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே அவருக்கு ஆயிரக்கணக்கான பின் தொடர்வோர் குவிந்தனர்.

'கோச்சடையான்' திரைப்படம் இந்த வாரம் வெளிவர இருக்கும் நிலையில் நேற்று ரஜினிகாந்த் தன்னை டிவிட்டரில் இணைத்து கொண்டது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும்,  அவர் டிவிட்டரில் சேர்ந்து 24 மணி நேரத்தில் அவர் டிவிட்டர் கணக்கில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகவும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 100க்கும் மேற்பட்டோர் அவரை பின்தொடருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது முதல் டிவீட்டில் ‘இறைவனுக்கு வணக்கம். அனைவருக்கும் வணக்கம். என் ரசிகர்கள் எல்லோருக்கும் ஒரு மிக பெரிய நன்றி. இந்த டிஜிட்டல் பயணத்தை ஆரம்பிக்க உற்சாகமாக உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு டுவீட் செய்தி இதுவரை 13ஆயிரத்திற்கும் அதிகமான முறை மீண்டும் மறு டுவீட் செய்யப்பட்டுள்ளது.

பாஜக தலைவர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல பிரபலங்களும், செய்தி ஊடகங்களும் ரஜினியை டுவிட்டரில் பின் தொடருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media