BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 7 May 2014

ஒரு ஓட்டுக்கு 8000 ரூபாய், தேர்தலில் பொழிந்த பணமழை

ஒரு ஓட்டுக்கு 8000 ரூபாய், தேர்தலில் பொழிந்த பணமழை


2009 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை திமுக கூட்டணி கட்சிகளால் வழங்கப்பட்ட்டது, 2011 சட்டமன்றத்தேர்தலில் ஓட்டுக்கு தரப்படும் பணம் குறைந்து தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு வெறும் 200 ரூபாய் தான் வழங்கப்பட்டதாகவும் அதுவும் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படாமல் பெண்கள் மற்றும் குறிப்பிட்ட வாக்காளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது, இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது, சீமாந்திராவில் சந்திரபாபு கட்சிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது, இரண்டு கட்சிகளுமே கொழுத்த பணக்காரர்களையே தேர்தலில் நிறுத்தியுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி கட்சியினர் பல இடங்களில் ஒரு ஓட்டுக்கு 8000 ரூபாய் வரை தந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பல இடங்களில் மக்கள் காசுக்கு பதிலாக செல்போன் கேட்ட கதைகளும் நடந்துள்ளன.

மற்ற மாநிலங்களில் ஓட்டின் விலை ஏறிக்கொண்டே போகிறது, ஆனால் விலைவாசி ஏறினாலும் தமிழ்நாட்டில் மட்டும் ஓட்டின் விலை மட்டும் குறைந்து கொண்டே போகிறது


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media